நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 05, 2011

ரங்கமணியும்.. தங்கமணியும்..

husband-and-wife-fight.jpg

 “அப்பாடா...கால் வலி உயிர் போறது, ...அந்த பேப்பரை கொஞ்சம் இப்படி கொடுங்கோ”

என்றபடி வந்து சோபாவில் உட்கார்ந்தார்,மனைவி.

பேப்பரை எடுத்து கொடுத்த கணவன், “அடுப்புல என்ன வைச்சிருக்க ? ஏதோ தீயர மாதிரி இருக்கு.”

 “இப்பதான் பீன்ஸ் காய பாணலில போட்டு நிறைய ஜலம் விட்டுட்டு அடுப்ப சின்னதாக்கி வைச்சிட்டு வந்தேன். இன்னும் 10/15 நிமிஷமாவது ஆகும் அதுல ஜலம் குறையறத்துக்கு. என்ன நீங்க என்னை சின்ன குழந்தைன்னு நினச்சிண்டு இருக்கீங்களா? தீயரது கீயரதுன்னு!! சித்த பேசாம இருங்கோ”

கணவன் : “சரி.. இனிமே நான் ஒண்ணும் சொல்லலை! என்றபடி எழுந்து உள்ளே போனார்.

சிறிது நேரம் கழித்து.

மகள்: அம்மா அடுப்புல என்ன வைச்சிருக்க! ஏதோ தீயரது!

மனைவி:ஐய்யய்யோ! பீன்ஸ்ஸ வைச்சிட்டு மறந்து போய் பேப்பர் படிக்க உட்கார்ந்துட்டேன்” என்றபடி வேகமாக சமையலறைக்கு போனார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த கணவர்: “என்னாச்சு? ..பார்த்தையா நான் அப்பவே சொன்னேன் ஏதோ தீயரதுன்னு நீ தான் கேட்கலை.”

மனைவி: “ஆமாம் இப்ப வாங்கோ அப்ப வெறுமயாவது பய முறுத்தினேள்.!!!இப்ப நிஜமாவே தீயரச்சே வந்து சொல்லாதீங்கோ,!!!!உங்களோட இதே தொல்லையா போச்சு,பரவாயில்லை ஒரு நாள் தீஞ்சுபோன காய சாப்பிடுங்கோ!”

 “நான் என்னடி பண்ணட்டும் !!சொன்னலும் தப்பு சொல்லவிட்டலும் தப்புங்கிற”
என்றபடி நகர்ந்தார்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் எங்க அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடந்த வாக்குவாதம்.

இது முந்தாநாள் அப்படியே எங்க வீட்டிலும் ரீபீட் ஆச்சு.இங்க என்னம்மா அப்பாவிற்கு பதிலா நானும் என் கணவரும்.

“சொன்னலும் தப்பு சொல்லட்டாலும் தப்பு” என்ற என் கணவரின் வார்த்தைகளை கேட்டவுடன் எனக்கு என் அம்மா அப்பா பேசிக்கொண்டது நினைவுக்கு வந்து ஏகமாக சிரிப்பு வந்து சிரிக்க ஆரம்பித்தேன்.

 “இப்ப எதுக்கும்மா சிரிக்கற பீன்ஸ் தீஞ்சு போனத்துக்கா? ”என்ற என் பெண்களின் கேள்வியை கூட சட்டைப் பண்ணாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்.

காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.

சற்று நேரத்தில் என் சிரிப்பு அடங்கியதும்,என் கணவர் பெண்களிடம், “உங்கம்மா இப்ப எதுக்கு சிரிச்சா?” என்றார்.

அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சன்னு தெரிஞ்சுடும்”

நான் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தேன்........




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

வியாபாரம்...

முக புத்தகத்தில்(face book) நான் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதை முடிந்த வரையில் தமிழாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். அதன் கீழேயே ,ஆங்கிலத்தில் நான் படித்ததை அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்து ரசிக்கவும்....
                     ----------------------------------------------------------------

தந்தை :  நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மகன் :    முடியாது.

தந்தை: அவள் பில்கேட்ஸின் பெண்.

மகன்:  அப்படியானால் சரி அவளையே திருமணம் செய்து கொள்கிறேன்.

தந்தை பில் கேட்ஸிடம் போகிறார்.

தந்தை: உங்க பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுகிறேன்.

பில்கேட்ஸ்: அது முடியாது.

தந்தை: என் மகன் உலக வங்கியின் சி.இ.வோ (CEO).

பில்கேட்ஸ்: அப்படியானால் சரி 

தந்தை உலக வங்கி தலைவரிடம் போகிறார்.

தந்தை: என் மகனுக்கு உலக வங்கியின் சி.இ.வோ வேலை கொடுக்கவும்.

தலைவர்: அது முடியாது.

தந்தை: என் மகன் பில் கேட்ஸ்ஸின் மருமகன்.

தலைவர்:அப்படியானால் அந்த வேலை கொடுக்கிறேன்.

இதுதான் வியாபாரம் என்பதோ?????????????




Dad: I want u 2 marry a
girl of my choice.

Son: No

Dad: The girl is Bill Gates'
daughter.

Son: Then ok

Dad goes 2 Bill Gates

...Dad: I want ur daughter 2 marry
my son.

Bill Gates: No

Dad: My son is d CEO of the World
Bank.

Bill Gates: Then ok

Dad goes 2 the President of the
World Bank..

Dad: Apoint my son as the CEO of
ur bank.

President: No!

Dad: He is the son-in-law of Bill
Gates.

President: Then ok!

This is BUSINESS..
 ------------------------------------------------------------------------------------------



வியாழன், ஆகஸ்ட் 11, 2011

பெர்முடா பெருமாள்.



------------------------------------------------------------------


ஒரு விடுமுறை நாளில் வீட்டில் தொலைகாட்சியில் இராமாயணம் தொடர் பார்த்துக்கொண்டிருந்தோம். இராமர் குரு குலத்தில் கல்வி கற்பது,வில்வித்தை பயில்வது ஆகியவற்றை பார்த்து
என் மகள் கேட்டாள்:

“எம்மா

 அந்த காலத்தில் இப்படி oral ஆ( வாய்மொழியாக) தான் எல்லாம் கத்துக்கணுமா? இப்ப....

அவளை முடிக்கவிடாமல் நான் உடனே :

“ஆமாம், ஓலைசுவடிகள் உபயோக படுத்தபட்டதற்க்கு முன்னாடி குரு சொல்லி கொடுப்பதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும் எழுதிவைப்பதெல்லாம் கிடையாது.அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி நன்றாக இருந்தது. ஒரு முறை சொல்லி கொடுப்பதை பல முறை திருப்பி திருப்பி சொல்லி பழகி கொள்ள வேண்டும்.எழுதி வைத்து கொண்டு படிப்பதறக்கெல்லாம் வசதி கிடையாது.புத்தகம் பேப்பர் எல்லாம் இப்ப 150/200 வருஷங்களாகத்தான் இருக்கு.

இப்ப நீங்க பள்ளிகூடத்தில் கொடுக்கும் வீட்டு பாடங்களை சுயமா சிந்தித்து எங்க எழுதுரீங்க ??வீட்டுக்கு வந்த உடனே கணணி முன்னாடி உட்கார்ந்து கூகிள் பண்ணி எழுதி எடுத்துக்கொண்டு போயிடுரீங்க.!

இராமாயணம,மஹாபாரதம் எல்லாம் ஸ்லோகங்களாக சொன்னதுதான்.அந்த காலத்தில் எழுத்து வசதிகள் இல்லாத போதும் வாய்மொழியாகவே சொல்லி சொல்லி காப்பற்றி வந்தார்கள்.”

ஒரே மூச்சில் பேசிவிட்டு நான் நிறுத்த,

என் பெண்:

“பேசி முடிச்சியா? நான் என்ன கேட்க போறேன்னு முதல்ல கவனி அப்பறமா நீ பதில் சொன்ன போதும்”. என்றாள்.

நான் :

“சரி என்ன கேக்கப்போற”?

அவள்:

 “ ராமர், கிருஷ்ணர் அப்பறம் மற்ற அவதார பெருமாள் எல்லாம் குருகுலத்துக்கு போய் வில்வித்தை, வேதம்,இன்னும் பல விஷயம் கத்துண்ட மாதிரி கல்கி அவதார பெருமாள் யுனிபார்ம் போட்டுண்டு, ஐ-பாட், லாப் டாப் எல்லாம் எடுத்துண்டு ஸ்கூலுக்கு போவாரா?


நான்:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவள் தொடர்ந்து:


 "கல்கி பெருமாள் பெர்முடாஸ் டீ ஷர்ட் எல்லாம் போட்டுண்டு போறதை நான் கட்டாயம் பார்க்கணும்மா!"






வெள்ளி, ஜூலை 08, 2011

துணுக்கு.....



.

  அந்த 8 வயது சிறுவன் மிகுந்த சோகத்துடன் தோட்டத்தில் குழி வெட்டிக்கொண்டி இருந்தான்.

மதில் சுவருக்கு அந்தப்பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி:

 “கண்ணா என்ன செய்துகொண்டு இருக்கிறாய்”

 “குழி தோண்ட்டிக் கொண்டுயிருக்கேன் ஆண்ட்டி”

“ எதுக்குப்பா குழி”

“என்னோட கோல்டு பிஷ் செத்துப்போயிடுத்து அதை புதைப்பதுக்குதான்”


 “அட பாவமே”
 “அது சரி உன் மீன் சின்னது தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குழி”

 “ஆமாம் ஆண்ட்டி மீன் சின்னதுதான் ஆனா அது இப்ப உங்க வீட்டு பூனையோட வயத்துல இல்ல இருக்கு!!”







-------------------------------------------------------------------------------------------------------------







வியாழன், ஜூன் 30, 2011

என் மக்கள்...


”அம்மா.”.!!...

பெரியதாக சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்...

எதிரில் என் சின்ன பெண் இடுப்பில் கைவைத்தபடி என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்..

  “என்ன நிந்துண்டே கனவா???”

  “அப்பா கூப்பிடறா பாரு” என்றாள்.

  “எதுக்கு டீ கூப்பிடறா”

  “என்ன மா நீ அப்பா சாப்பிட உட்கார்ந்துண்டு இருக்கா நீ என்னடன்னா தட்டுல சாதத்தை போட்டுட்டு இங்க வந்து கனவு காண்டுண்டு இருக்க?? போ போய் மீதிய கவனி”..

அதற்குள் உள்ளே வந்த என் பெரிய பெண்
  “அம்மா நானும் உன்னை கூப்பிட்டு பார்த்தேன், நீ என்னன்னு கேட்கலே அதனால , அப்பாக்கு நானே குழம்பும் காயும் எடுத்துண்டு போய்ட்டேன்.”
என்றவள்

 தங்கையை பார்த்து, “அப்பா பச்சடி கேட்கிறா பாரு எடுத்துண்டு போ”
என்றாள்.
பிறகு என்னிடம் திரும்பி,

  “ ஏம்மா!! உனக்கு என்ன ஆச்சு, இரண்டு மூன்று நாளாகவே ஒரு மாதிரி இருக்க எதையோ யோசிச்சுண்டே இருக்க”???  என்றாள்.

என்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றவுடன் மறுபடியும்

“என்னம்மா ஆச்சு” என்றாள்.

அதற்குள் திரும்பி வந்த என் சின்ன பெண்ணும் “என்ன ஆச்சு”என்று கேட்க

பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட நான்
கொஞ்சம் அசட்டு சிரிப்புடன்,

   “ஒண்ணும் இல்லடி பசங்களா புதுசா Blog ஆரம்பித்து எழுதுகிறேன் இல்லையா அதுதான் வித்யாசமா என்ன எழுதுவதுன்னு யோசிசுண்டு இருந்தேன்”... எனறவுடன் இரண்டு பேரும் ஆரம்பித்துவிட்டார்கள்..

பெரியவள்:  “என்னம்மா நீ வேலையெல்லாம் இல்லாம ஃப்ரியா இருக்கச்சே யோசிக்க கூடாதா? அப்பாவ பத்திதான் தெரியுமே சரியா கவனிக்கலைன்னா கோவம் வந்துடுமே” என்றாள்..

சின்னவள் (கொஞ்சம் நக்கல் party): “ நன்னா யோசிச்ச போ ...ஒன்ணு பண்ணு தினமும் கார்த்தால ‘ பார்க்’ க்கு walking போவ பாரு அப்ப யோசிச்சுண்டே நட உனக்கு நடக்கற சிரமம் தெரியாது. அதோட யோசிசுண்டே உனக்கே தெரியாம இன்னும் ஒரு 3 அ 4 சுத்து ஜாஸ்தியா சுத்தினினாக்க உடம்பாவது சீக்கிரம் இளைக்கும்”  என்று தாக்கினாள்.

 நான் பதில் பேச தோன்றாமல் நிற்க என் நிலமையை பார்த்து என் பெரிய பெண்(எப்போதும் அவள்தான் ஆபத்பாந்தகி) சின்னவளிடம்

 “போடீ வாயாடி, அம்மா பாவம் இப்பொழுதுதான் புதுச எழுத ஆரம்பிச்சு இருக்கா அப்படிதான் இருக்கும்” என்றாள்..

ஆனாலும் சின்னவள் விடாமல், “ அம்மா வித்யாசமா எழுதணும்னு யோசிக்க எல்லாம் வேண்டாம். இப்ப நீ இப்படி நிந்துண்டே யோசிச்சத பத்தி எழுது போதும்.எல்லோரும் சிரிப்பார்கள்”  என்றாள் நக்கலுடன்.

நான் பே!!!! என்று விழித்த நேரத்தில் “அங்க என்ன பேச்சு?? மோர் எடுத்துண்டு வா” என்ற என் கணவரின் குரலை கேட்டவுடன்-----
எல்லோரும்;   “escapeeeeeeeee”
-------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: பதிவுக்கு தலைப்பு என் மக்கள் என்று வைத்து விட்டேன் அனால் அது பதிவில் எங்கும் வரவில்லையே?? என்ன செய்வது?? ம்ம்ம்???அதனால்

இப்படி கஷ்டபட்டு யோசித்து, பதிவு நன்றாக வந்து, பதிவுலக மக்களிடமிருந்து நல்ல comments  வர வேண்டுமென்றால் என் மக்கள் இடமிருந்து இப்படி பட்ட நக்கல்களையெல்லாம் பொருத்துகொண்டுதான் ஆக வேண்டும்...

ஆ தலைப்பு வந்து விட்டது....



திங்கள், ஜூன் 20, 2011

இல்லையா.......

என் சிறிய பெண்ணிற்கு இப்பொழுது 15 வயதாகிறது. அவளுக்கு 6/7 வயது இருக்கும் பொழுது என்ன பேசினலும் இல்லையா என்கிற வார்தையை கூட சேர்த்துகொண்டு பேசுவாள். (உம்..பால் சாப்பிடலாம் இல்லையம்மா? படிக்கலாம் இல்லையாப்பா ...). நாஙகளும் அப்படி பேசக்கூடாது என்று அவளுக்கு புரியவைக்க ரொம்ப் கஷ்டப்பட்டோம். அதை திருத்தவே முடியவில்லை.

ஒரு நாள் என் கணவர் அவளை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக்கொண்டு ரொம்ப நேரம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பிறகு நான் சொல்லுவது புரிகிறதா என்று கேட்டார். அவளும் எனக்கு ரொம்ப நன்றாக புரிந்துவிட்டது என்ற்வுடன். என்ன புரிந்தது என்று அவரும் கேட்க அதற்கு என் மகள் *இல்லையா சொல்லக்கூடாது இல்லையாப்பா* என்றாளே பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சிறிப்பு அடங்க ரொம்ப நேரமானது.


அதன் பிறகு 1/2 வருடங்களில் அப்படி பேசுவது தானகவே நின்று விட்டது. இப்பொழுது நன்றாக பேசுகிறள்.