பயணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 09, 2012

சுற்றுலா ......குளு குளு கூர்க்.--2







இப்படி  கடைத்தெரு வீடுகளை பார்த்துக்கொண்டே சென்றால்

10 நிமிடங்களில் தலைக்காவேரி செல்லுவதற்கான பாதை வந்து

விடுகிறது. அதில் செல்லும் முன் ஊரை திரும்பிப்பார்த்தால்

பசுமையான மலைச்சரிவில் பசை தடவி ஒட்ட

வைத்தாற்போல காணப்படும் வீடுகள், கடைகள் சாலைகள்,....

அதன் அழகு மனதை கொள்ளை கொண்டது.

இதனுடன் குளுமையான ஒரு சீதோஷண நிலை. மனதில்

சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் ஆக்கிரமித்துக்கொண்டது.

நகர வாழ்கையின் பரபரப்பை விட்டு விலகி அமைதியான

சூழ்நிலையில் இப்படி இயற்கை காட்சிகளை காணும் போது

நாம் அடையும் சந்தோஷம் எல்லையற்றதாக இருக்கிறது.

















மெர்காராவிலிருந்து தலைக்காவேரி சுமார் 35 கி.மீ இருக்கும்.

வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை சுமாரான

பாராமரிப்பு..இரண்டு புரமும் பசுமையான மேற்கு தொடர்ச்சி

மலைகள், சரிவுகளில் காப்பி தோட்டங்கள், இலேசான குளிர்

என மிகவும் சுகமான அனுபவத்துடன் பயணப்பட்டோம்.




தலைக்காவேரி.....

காவேரி நதி ஆரம்பிக்கும் இடம்.



















அழகிய பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைக்களுக்கிடையே

உள்ளது இந்த இடம். காவேரி ஒரு சிறு ஊற்றாக தன்

பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறாள். சுமார் 3

கீமீ.பூமிக்கடியிலேயே ஓடி அதன் பிறகு  காடுகளில்

வெளிப்பட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. குடகு மலைப்பகுதியில்

உள்ள பாகமண்டலா என்கிற இடத்தில் கனிகா என்கிற

நதியுடனும், சுஜோதி என்கிற கண்களுக்கு புலப்படாத புராண

நதியுடனும் காவேரி சங்கமிக்கிறது.  இங்கு பாகதீஸ்வரா என்கிற

ஈஸ்வரின் கோவில் உள்ளது. இந்த மூர்த்தியின் பெயராலேயே

இந்த இடம் பாகமண்டலா என்று அழைக்கப்படுகிறது.

.இங்குதான் காவேரியை நாம் பார்க்க முடிகிறது.

இரு நதிகளுமே மிகச்சிறிய ஓடை

அளவிற்கே இருப்பதை பார்க்க முடிகிறது.. 3 நதிகள்

சங்கமிப்பதால் இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்றும்

அழைக்கிறார்கள்.



பாகமண்டலா.

பாகமண்டலா திரிவேணி சங்கமம்.

பாகமண்டலாவில் காவிரி.

திரிவேணி சங்கமம்.

பாகதீஸ்வரா கோவில்


































































பாகமண்டலாவிலிருந்து மறுபடி காவேரி காடுகளின் வழியே ஓடி மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளிவந்து பிறகு ஸ்ரீரங்கபட்டிணம் சிவன்னசமுத்திரம் ஆகியஇடங்களின் வழியே தமிழகத்தை அடைகிறது.


அடுத்த பதிவு
அபி நீர்வீழ்ச்சி.....


அன்புடன்
ரமாரவி.

புதன், அக்டோபர் 31, 2012

சுற்றுலா.....குளு குளு கூர்க்..


 குளுமையான கூர்க்கிற்கு சுற்றுலா என்பதனால் உடனடியாக கிளம்பிவிட்டோம். ( ஆனால் பல அலுவல்களுக்கு நடுவில் செல்ல வேண்டி இருந்ததால் இரு தினங்கள் மட்டுமே பயணம். ஆனால் மறக்க முடியாத பயணம்.)

கூர்க்...





உயர்ந்து பனிபடர்ந்து நிற்கும் இமைய மலைத் தொடரைப் பார்த்தால்,அதன் கம்பீரமான அழகு மனதை கொள்ளை கொள்ளும்.

ஆனால், எங்கு திரும்பினாலும் பசுமையை போர்த்திக்கொண்டு இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை கண்ணையும்,மனதையும் அதிகம் கவர்ந்து விடுகிறது.


முதல் நாள் மைசூருக்கு சென்று அரண்மனை, கே.ஆர்.எஸ். அணை எல்லாம் பார்த்து விட்டு  மைசூரிலேயே தங்கி விட்டோம். ஏற்கனவே மைசூர் சுற்றுலா பற்றி எழுதி விட்டதால் இங்கு கூர்க மட்டும்  பார்க்கலாம்...((- மைசூர் சுற்றுலா.))


மறு நாள் காலை 7 மணிக்கு கூர்க்கிற்கு கிளம்பினோம். கூர்க் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் உள்ளடக்கிய ஒர் மாவட்டம்.இதன் தலைநகர் மெர்காரா எனப்படும் மடிக்கேரி ஆகும்.ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மெர்காரா. கர்நாடகத்தில் இதற்கு பெயர் மடிக்கேரி.




11ம் நூற்றாண்டு வரை குடகின் வட பகுதி, கடம்பர்களாலும், தென் பகுதி கங்கர்களாலும் ஆளப்பட்டு வந்தது. 11ம் நூற்றாண்டில் இது சோழர்களின் வசம் வந்தது, அதற்கு பிறகு ஹொயிசாலர்கள், விஜயநகரத்து அரசர்கள்,  பிறகு சுமார் 200 வருடங்கள் ஹலெரி வம்சத்தினரால் ஆளப்பட்டு 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் வசம் வந்தது. பிறகு 1834ல் ஆங்கிலேயரிடம் வந்து குடகு கூர்க் எனவும், மடிகேரி மெர்காரா எனவும் ஆகியது.



சுமார் 3500 அடி உயரத்தில்.


 மைசூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது. மெர்காரா வரையில் சாலை நல்ல பராமரிப்பில் இருந்தது மிகச்சீக்கிரத்தில் மெர்காரவை அடைய முடிந்தது. வழியில் நிறைய கிராமங்களும், பிலிகேரி, ஹன்சூரு மற்றும் குஷால்நகர் ஆகிய பெரிய ஊர்களும் இருக்கிறது. இதில் குஷால் நகர் சற்று பெரியதும் பரபரப்பு மிகுந்த ஊராகவும் இருக்கிறது. இதற்கு அருகில் உள்ள பைலகுப்பே (Bylakuppe) என்கிற இடம் இந்தியாவில் திபத்தியர்கள் இரண்டாவதாக அதிகமாக குடியேறிய இடமும், அவர்களது தங்க புத்தர் கோவில் உள்ள இடமும் ஆகும்.









மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஆகிய இடங்களை மாதிரியே இப்பகுதிகளின் வளர்ச்சியில் திப்பு சுல்தானின் பங்கு பெருமிகிதத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


இப்படி பல ஊர்களை கடந்து மெர்க்காரவை அடைந்தோம். மலை ஏறுவதே தெரியாமல் சற்றென்று மலைப்பகுதியை அடைந்து விட்டால் போல இருந்தது சாலை. மெர்காரா வருவதற்கு சற்று முன்னதாகவே காபி தோட்டங்களை பார்க்க முடிந்தது. மலைப்பதையை நெருங்க ஆரம்பித்ததும், எங்கு திரும்பினாலும் காபி தோட்டம்தான்.  சாலையின் இரு பக்கங்களிலும் மிக அழகாக பரமரிக்கபடும் மிகப்பெரிய அளவிலான காப்பி தோட்டங்களையும் அதன் நடுவே  பெரிய ஓட்டு வீடுகளும் காண முடிந்தது.

காபி தோட்டம்.




காபி தோட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றால் மெர்க்காரா வந்து விடுகிறது. மலைச்சரிவுகளில் வீடுகள் கடைத்தெருக்கள் என மிக அழகான ஊர்.


 அடுத்த பதிவில்...தலைக்காவேரி..


.

வியாழன், பிப்ரவரி 02, 2012

மங்களூர் சுற்றுலா--5.

மங்களூர் சுற்றுலா--1,   மங்களூர் சுற்றுலா--2,   மங்களூர் சுற்றுலா--3,
மங்களூர் சுற்றுலா--4

ST. MARY's ISLAND.




அந்த மோசமான படகில் பயந்து கொண்டே 1/2 மணி நேரப்பயணத்திற்கு பிறகு தூரத்தில் செயிண்ட்.மேரி தீவின் கரை தெரிய,ஆஹா!!இடம் வந்துவிட்டது 10 நிமிடங்களில் இறங்கி விடலாம் என்று நினைத்து அதுவரை மூச்சைப்பிடித்து பயந்து கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் சற்று பயம் தெளிந்து மூச்சுவிட எத்தனித்த போது... ...படகு திடீரென்று சுமார் 80அடிக்கு மேல் ஆழம் இருக்கும் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது.


படகு திடீரென்று நிற்க எல்லோருக்கும் அதிர்ச்சி..என்ன ஆயிற்று என நாங்கள் வினவ,படகோட்டிகள் இந்த படகு பெரிய படகு இதை கரைக்கருகில் கொண்டு செல்ல முடியாது,எனவே வேறு இரண்டு சிறிய படகுகள் வரும், நீங்கள் எல்லோரும் இந்த படகிலிருந்து அந்தப்படகில் ஏறிக்கொள்ள வேண்டும், அது உங்களை கரைக்கு அழைத்து செல்லும்,என்று சொல்ல, எனக்கோ பலத்த அதிர்ச்சி.

நடுக்கடலில் படகு மாற வேண்டுமா? தடுக்கி விழுந்தால் என்ன ஆவது?





இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ற மாதிரி என் பெண்களும் படகில் இருந்த இளவட்டங்களும் "wow !!what an adventure"  என்று படகுக்கு மாற தயாரானார்கள். நிறுத்தப்பட்டிருந்த இந்த பெரிய படகு நின்ற இடத்திலேயே முழு வட்டமாக சுற்றிக்கொண்டிருந்தது. அதை முதலில் உணரவில்லை, பிறகு உணர்ந்த பொழுது எனக்கு பயம் அதிகமானது. சிறு படகு ஒன்று அருகில் வர அதை பெரிய படகுடன் கயிறு கொண்டு கட்டி, இரண்டு பட கோட்டிகள் அக்கயிற்றை பிடித்துக்கொண்டார்கள்.கடலில் படகுகள்  தண்ணீரில் மிதப்பதால் சரியாக நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. என்ன தான் ஒன்று சேர்ந்தால் போல படகுகள் சுற்றினாலும்,  படகு மாறுவது கஷ்டமாக இருந்தது.


பிறகு மெள்ள நடந்து பெரிய படகிலிருந்து சிறிய படகில் தாவி ஏறிக்கொண்டோம். இனி இந்த மாதிரி பாதுகாப்பில்லாத பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, தட்டுத்தடுமாறி சிறிய படகில் ஏறிக்கொண்டேன்.திரும்பி வரும் பொழுது இதே மாதிரி படகு மாற வேண்டும் என்று நினைத்தவுடன், எனக்கு அந்த தீவை ரசிக்கும் ஆசையே போய்விட்டது. பிறகு அந்த சிறு படகில் 10 நிமிட பயணத்தில் கரைக்கு சென்றது.கரையில் இறங்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.








இறங்கி நடக்க ஆரம்பித்ததும்,சற்று பயம் தெளிந்து என் பெண்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள தீவினை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சுமார் 1/2 கி.மீட்டருக்கும் குறைவான சுற்றளவே கொண்ட சிறு 
தீவு. நாங்கள் சென்றது மாலை சுமார் 5 மணி. சூரியன் கடலில் மாலைக் குளியலுக்கு தயாராக இருந்தார். இந்தப் பக்கம்கரையிலிருந்து நடக்க ஆரம்பிக்க 10 நிமிடங்களேயே அந்தபக்க கரை வந்து விட்டது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய பாறைகள், ஒரு சில தென்னை மரங்கள்.....


ஒரு காலத்தில் அழகாய் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது அதிகமான மக்கள் வருகையால் பாழாக ஆரம்பித்துள்ளது.



தீவையும், கடலையும் ரசித்துவிட்டு, சுமார் 1 மணி நேரம் கழித்து திரும்பினோம். மறுபடி முதலில் சிறிய படகு, பிறகு பெரிய படகு என்று பயணித்து மால்பே கடற்கரைக்கு வந்தோம்.

இப்படியாக அதிர்ச்சி, பயம் சந்தோஷம் ஆகிய உணர்வுகளுடன் ஒரு படகுப்பயணம் மேற்கொண்டு விட்டு மங்களூருக்கு திரும்பினோம்....

உடுப்பிக்கு அருகில் புகழ் பெற்ற,  “மணிபால் பல்கலைக்கழகம்”உள்ளது. நேரமின்மை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை.




அடுத்த பதிவு மங்களூர் சுற்றுலா கடைசி பகுதி. திகிலான மலைப்பாதை பயணம் மற்றும் வழியில் நான் கண்டு ரசித்த இயற்கை காட்சிகள்........

----------------------------------------------------------------------------------------------------------------