நவம்பர் 14 ம் தேதி, என் வீட்டு வேலை செய்யும் ரத்னா,வேலைக்கு வரும்போதே மிக பரபரப்புடன் வந்தார்.அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:-

“அம்மா டி.வி. போடுங்க ஐஸ்வரியாராய்க்கு குழந்தை பிறந்திடுச்சா பார்த்து சொல்லுங்க”.
“எதுக்கு ரத்னா”? என்ன குழந்தை அப்படீன்னு தெரிஞ்சுக்கணுமா”?
“ஆமாம் மா,அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்துதுனாக்க தங்க ஒரு கிராம் 1000 ருபாய்க்கு கொடுக்கறாங்களாம், வட்டிக்காரர் கிட்ட கேட்டு பணம் வாங்கிக்கணும் இல்லைன்னா, வீட்டுல இருக்க எல்லாத்தையும் கொண்டு வச்சாவது கடன் வாங்கி நந்தினிக்கு (அவரின் 13 வயது பெண்) ஒரு 15/20 கிராம் வாங்கிவிட வேண்டும்”
“என்ன ரத்னா? நீ என்ன சொல்லற? தங்கம் விக்கற விலையில அது யாரு அது 1000 க்கு கொடுப்பது”?
“எங்க வீட்டு கிட்ட பேசிக்கிட்டாங்கம்மா.எல்லோரும் வாங்கப் போறாங்களாம்”
“அதெல்லாம் இருக்காது ரத்னா யாராவது கதை கட்டி விட்டிருப்பாங்க.தங்கம் விக்கற விலையில அவ்வளவு குறைச்சலாக யாரும் கொடுக்க மாட்டாங்க”
“இல்லம்மா!! நீங்க வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களா அதனால உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. !!!!!!!!!!!!!!!!. நிஜம்மா கொடுக்கறாங்களாம், நீங்களும் அண்ணங்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிக்கோங்க ”.
“ரத்னா நீ பாட்டுக்கு வட்டிக்கு கடன் எல்லாம் வாங்காத,எனக்கென்னமோ இது புரளின்னுதான் தெரியறது. எவனாவது வட்டிக்கடைக்காரன் உங்களை எல்லாம் ஏமாத்த கிளப்பி விட்டிருப்பான்.நீங்களும் வட்டிக்கு பணத்த வாங்கி, தங்கமும் வாங்காம பணத்தையும் செலவழிச்சு நஷ்டப்பட வேண்டிதான். அதனால நான் சொல்லறதை கேளு.2 நாள் பொறு, அவங்களுக்கு குழந்தை பிறக்கட்டும், அப்ப என்ன ஆகிறதுன்னு பார்க்கலாம்”
“சரிம்மா” என்று சொன்னாலும்,
இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே, இவங்க படிச்சவங்க இல்லை போல இருக்கு என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.அதற்கு அடுத்த நாள் வருவதற்குள் எனக்கு மண்டை வெடித்து விட்டது. என்னாச்சோ என்னமோ? ஐஸுக்கு இன்னும் குழந்தை பிறந்த தகவல் வேறு வரவில்லையே, ரத்னா கடன் வாங்கி விட்டாரா? ஏமாந்து போய்விட போகிறார் என்று ஏதேதோ எண்ணங்கள்..
16ம் தேதி காலையில் வந்தார்,வந்தவுடன் நான் உடனே கேட்டேன்
“கடன் ஏதாவது வாங்கிவிட்டையா ரத்னா? என்னாச்சு தங்கம் கொடுக்கிறார்களா? குழந்தை பிறந்து விட்டதா?"
"இன்னும் இல்லம்மா. கடன் இப்ப வாங்க வேண்டம் அப்படீன்னு எங்க அத்தை(மாமியார்) சொல்லிருச்சு”
“ரத்னா மாமியார் சொன்னத கேளு.யாரும் இப்ப தங்கம் விக்கற விலையில ஒரு கிராம் 1000 த்துக்கு கொடுக்க மாட்டாங்க”
“சரிம்மா, பார்க்கலாம்” என்று நான் சொன்னதை கேட்டு பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு சென்றார்..
நான் அறிவுறுத்திவிட்டேன், புரியவில்லையா இல்லை நான் சொல்லுவது பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.சரி போகட்டும் எல்லாம் அவள் தலை எழுத்து என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.
அன்று சாயந்திரம் ஐஸுக்கு பெண் குழந்தை பிறந்த விவரம் தெரியவந்த உடன், எனக்கு ரத்னா நினைவுக்கு வந்தார். பெண் குழந்தை பிறந்தால்தான் தங்கம் விலை கம்மி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஒன்றும் கிடையாது என்று ரத்னா சொன்னாளே! ஆண் குழந்தையாவது பிறந்திருக்கக் கூடாதோ? எத்தனை பேர்கள் ஏமந்தார்களோ? பாவம்! என்று மறுபடியும் எனக்கு ஏதேதோ எண்ணங்கள்!!!

மறுநாள் காலை ரத்னா வந்தவுடன் அவரே, “அம்மா நீங்க அன்னைக்கே சொன்னீங்களா? நானும் யோசிச்சேன்.எங்க அத்தை வேற சொல்லிச்சா? அதனால் பெரியவங்களா சொல்லறாங்களே அப்படீன்னு நல்ல வேளை நான் கடன் வாங்கலை.யாரும் அப்படி தங்கம் எல்லாம் கொடுக்கலை.எங்க வீடுங்க இருக்கற பக்கம் யாரோ ஏமாத்தி இருக்காங்க.அப்படி எங்க வீட்டாண்ட இரண்டு பேர் வட்டிக்கு வாங்கிட்டாங்க. சரி தங்கம் கிடைக்கலன்னு பணத்த அப்படியே அன்னைக்கே திருப்பி கொடுக்கலாம்ன்னு போனா,வட்டிக்கடைகாரர் பிடித்த வட்டியை திருப்பி கொடுக்க மாட்டேன்,அடுத்த மாத வட்டியும் கொடு அப்படி இப்படின்னு ஒரே தகராறு பண்ணியிருக்காங்க! அப்பறமா எப்படியோ ஒரு மாத வட்டியோட விட்டாரு.பாவம் அவங்க ஒரு நாள் கூட பணத்தை வச்சுக்கல அதுக்குள்ள 350/400 நஷ்டம் ஆயிருச்சு.”
“நல்ல வேளை ரத்னா ஏதோ நீயாவது என்பேச்சையும், உன் மாமியார் பேச்சையும் கேட்டியே? பாவம் நஷ்டப்பட்டவங்க, இனிமேலாவது இதையெல்லாம் நம்பாதே! பாரு உங்க மாமியாருக்கு எல்லாம் தெரிந்திருக்கு.”என்றேன்.
“அதெல்லாம் இல்லைம்மா! அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, மூணு வருஷத்துக்கு முன்ன ஏதோ கொஞ்சம் பணம் கட்டினாக்க 6 மாசத்தில பாத்திரம் கிரண்டர்,மிக்ஸி எல்லாம் தரேன்னு சொன்னங்களா,அதை நம்பி நான் 4000மும் அவங்க 3000 மும் கட்டி ஏமாந்து போயிடோம் அதுலேர்ந்து அவுங்க பணவிஷயத்துல ஜாக்கிரதையா இருக்காங்க.”.(அந்த அமர்க்களத்தையெல்லாம் அப்பறமா ஒரு நாள் உங்களுக்கு சொல்லறேம்மா இப்ப நேரம் இல்ல என்று சொல்லியிருக்கிறார்.)
“பாரு ரத்னா,உங்க மாமியார் ஒரு தடவை பட்டவுடன் எவ்வளவு நன்றாக புரிந்து கொண்டு விட்டாங்க! நீயாவது ஏதோ கொஞ்சம் படிச்சவ (7வது வரைக்கும் படித்திருக்கிறாராம்.) உங்க மாமியாரப்பாரு படிக்கலைனாலும் விவரமா இருக்காங்க அவங்கள பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
இப்படி ஏமாறும் எத்தனையோ பேர்களில் இந்த ஒரு தடவை ஒரு ரத்னா காப்பாற்றப்பட்டார். அவர் சொன்னதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிரார்கள் என்று தெரிகிறது.நமக்கு தெரியாமல் எத்தனைபேரோ? இந்த முறை அவரை சற்று யோசிக்கவைத்து உடனடியாக கடன் வாங்காமல் தடுக்க முடிந்தது. மேலும் படிப்பறிவே இல்லாத அவரின் மாமியார் அனுபவத்தால் திருந்தி ஜாக்கிரதையாக இருக்கிறார்.ஆனால் ரத்னா இன்னும் திருந்தினாரா தெரியவில்லையே? இனிமேலாவது ஏமாறாவது இருப்பாரா? இந்தமுறை ஏதோ எங்கள் பேச்சை கேட்டு பேசாமல் இருந்தார்!!யாரும் ஏதுவும் சொல்லவில்லை என்றால் கட்டாயம் கடன் வாங்கி இருப்பார்.மற்றவர் அனுபவத்திலிருந்து தாம் பாடம் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வருமா? இவர்களுக்கெல்லாம் யார்? எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?
ஒன்று மட்டும் தெரிகிறது -- விழிப்புணர்வு என்பது படிப்பதினால் வருவதில்லை, புரிந்து கொள்வதினால் வருகிறது.

“அம்மா டி.வி. போடுங்க ஐஸ்வரியாராய்க்கு குழந்தை பிறந்திடுச்சா பார்த்து சொல்லுங்க”.
“எதுக்கு ரத்னா”? என்ன குழந்தை அப்படீன்னு தெரிஞ்சுக்கணுமா”?
“ஆமாம் மா,அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்துதுனாக்க தங்க ஒரு கிராம் 1000 ருபாய்க்கு கொடுக்கறாங்களாம், வட்டிக்காரர் கிட்ட கேட்டு பணம் வாங்கிக்கணும் இல்லைன்னா, வீட்டுல இருக்க எல்லாத்தையும் கொண்டு வச்சாவது கடன் வாங்கி நந்தினிக்கு (அவரின் 13 வயது பெண்) ஒரு 15/20 கிராம் வாங்கிவிட வேண்டும்”
“என்ன ரத்னா? நீ என்ன சொல்லற? தங்கம் விக்கற விலையில அது யாரு அது 1000 க்கு கொடுப்பது”?
“எங்க வீட்டு கிட்ட பேசிக்கிட்டாங்கம்மா.எல்லோரும் வாங்கப் போறாங்களாம்”
“அதெல்லாம் இருக்காது ரத்னா யாராவது கதை கட்டி விட்டிருப்பாங்க.தங்கம் விக்கற விலையில அவ்வளவு குறைச்சலாக யாரும் கொடுக்க மாட்டாங்க”
“இல்லம்மா!! நீங்க வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களா அதனால உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. !!!!!!!!!!!!!!!!. நிஜம்மா கொடுக்கறாங்களாம், நீங்களும் அண்ணங்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிக்கோங்க ”.
“ரத்னா நீ பாட்டுக்கு வட்டிக்கு கடன் எல்லாம் வாங்காத,எனக்கென்னமோ இது புரளின்னுதான் தெரியறது. எவனாவது வட்டிக்கடைக்காரன் உங்களை எல்லாம் ஏமாத்த கிளப்பி விட்டிருப்பான்.நீங்களும் வட்டிக்கு பணத்த வாங்கி, தங்கமும் வாங்காம பணத்தையும் செலவழிச்சு நஷ்டப்பட வேண்டிதான். அதனால நான் சொல்லறதை கேளு.2 நாள் பொறு, அவங்களுக்கு குழந்தை பிறக்கட்டும், அப்ப என்ன ஆகிறதுன்னு பார்க்கலாம்”
“சரிம்மா” என்று சொன்னாலும்,
இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே, இவங்க படிச்சவங்க இல்லை போல இருக்கு என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.அதற்கு அடுத்த நாள் வருவதற்குள் எனக்கு மண்டை வெடித்து விட்டது. என்னாச்சோ என்னமோ? ஐஸுக்கு இன்னும் குழந்தை பிறந்த தகவல் வேறு வரவில்லையே, ரத்னா கடன் வாங்கி விட்டாரா? ஏமாந்து போய்விட போகிறார் என்று ஏதேதோ எண்ணங்கள்..
16ம் தேதி காலையில் வந்தார்,வந்தவுடன் நான் உடனே கேட்டேன்
“கடன் ஏதாவது வாங்கிவிட்டையா ரத்னா? என்னாச்சு தங்கம் கொடுக்கிறார்களா? குழந்தை பிறந்து விட்டதா?"
"இன்னும் இல்லம்மா. கடன் இப்ப வாங்க வேண்டம் அப்படீன்னு எங்க அத்தை(மாமியார்) சொல்லிருச்சு”
“ரத்னா மாமியார் சொன்னத கேளு.யாரும் இப்ப தங்கம் விக்கற விலையில ஒரு கிராம் 1000 த்துக்கு கொடுக்க மாட்டாங்க”
“சரிம்மா, பார்க்கலாம்” என்று நான் சொன்னதை கேட்டு பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு சென்றார்..
நான் அறிவுறுத்திவிட்டேன், புரியவில்லையா இல்லை நான் சொல்லுவது பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.சரி போகட்டும் எல்லாம் அவள் தலை எழுத்து என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.
அன்று சாயந்திரம் ஐஸுக்கு பெண் குழந்தை பிறந்த விவரம் தெரியவந்த உடன், எனக்கு ரத்னா நினைவுக்கு வந்தார். பெண் குழந்தை பிறந்தால்தான் தங்கம் விலை கம்மி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஒன்றும் கிடையாது என்று ரத்னா சொன்னாளே! ஆண் குழந்தையாவது பிறந்திருக்கக் கூடாதோ? எத்தனை பேர்கள் ஏமந்தார்களோ? பாவம்! என்று மறுபடியும் எனக்கு ஏதேதோ எண்ணங்கள்!!!

மறுநாள் காலை ரத்னா வந்தவுடன் அவரே, “அம்மா நீங்க அன்னைக்கே சொன்னீங்களா? நானும் யோசிச்சேன்.எங்க அத்தை வேற சொல்லிச்சா? அதனால் பெரியவங்களா சொல்லறாங்களே அப்படீன்னு நல்ல வேளை நான் கடன் வாங்கலை.யாரும் அப்படி தங்கம் எல்லாம் கொடுக்கலை.எங்க வீடுங்க இருக்கற பக்கம் யாரோ ஏமாத்தி இருக்காங்க.அப்படி எங்க வீட்டாண்ட இரண்டு பேர் வட்டிக்கு வாங்கிட்டாங்க. சரி தங்கம் கிடைக்கலன்னு பணத்த அப்படியே அன்னைக்கே திருப்பி கொடுக்கலாம்ன்னு போனா,வட்டிக்கடைகாரர் பிடித்த வட்டியை திருப்பி கொடுக்க மாட்டேன்,அடுத்த மாத வட்டியும் கொடு அப்படி இப்படின்னு ஒரே தகராறு பண்ணியிருக்காங்க! அப்பறமா எப்படியோ ஒரு மாத வட்டியோட விட்டாரு.பாவம் அவங்க ஒரு நாள் கூட பணத்தை வச்சுக்கல அதுக்குள்ள 350/400 நஷ்டம் ஆயிருச்சு.”
“நல்ல வேளை ரத்னா ஏதோ நீயாவது என்பேச்சையும், உன் மாமியார் பேச்சையும் கேட்டியே? பாவம் நஷ்டப்பட்டவங்க, இனிமேலாவது இதையெல்லாம் நம்பாதே! பாரு உங்க மாமியாருக்கு எல்லாம் தெரிந்திருக்கு.”என்றேன்.
“அதெல்லாம் இல்லைம்மா! அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, மூணு வருஷத்துக்கு முன்ன ஏதோ கொஞ்சம் பணம் கட்டினாக்க 6 மாசத்தில பாத்திரம் கிரண்டர்,மிக்ஸி எல்லாம் தரேன்னு சொன்னங்களா,அதை நம்பி நான் 4000மும் அவங்க 3000 மும் கட்டி ஏமாந்து போயிடோம் அதுலேர்ந்து அவுங்க பணவிஷயத்துல ஜாக்கிரதையா இருக்காங்க.”.(அந்த அமர்க்களத்தையெல்லாம் அப்பறமா ஒரு நாள் உங்களுக்கு சொல்லறேம்மா இப்ப நேரம் இல்ல என்று சொல்லியிருக்கிறார்.)
“பாரு ரத்னா,உங்க மாமியார் ஒரு தடவை பட்டவுடன் எவ்வளவு நன்றாக புரிந்து கொண்டு விட்டாங்க! நீயாவது ஏதோ கொஞ்சம் படிச்சவ (7வது வரைக்கும் படித்திருக்கிறாராம்.) உங்க மாமியாரப்பாரு படிக்கலைனாலும் விவரமா இருக்காங்க அவங்கள பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
இப்படி ஏமாறும் எத்தனையோ பேர்களில் இந்த ஒரு தடவை ஒரு ரத்னா காப்பாற்றப்பட்டார். அவர் சொன்னதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிரார்கள் என்று தெரிகிறது.நமக்கு தெரியாமல் எத்தனைபேரோ? இந்த முறை அவரை சற்று யோசிக்கவைத்து உடனடியாக கடன் வாங்காமல் தடுக்க முடிந்தது. மேலும் படிப்பறிவே இல்லாத அவரின் மாமியார் அனுபவத்தால் திருந்தி ஜாக்கிரதையாக இருக்கிறார்.ஆனால் ரத்னா இன்னும் திருந்தினாரா தெரியவில்லையே? இனிமேலாவது ஏமாறாவது இருப்பாரா? இந்தமுறை ஏதோ எங்கள் பேச்சை கேட்டு பேசாமல் இருந்தார்!!யாரும் ஏதுவும் சொல்லவில்லை என்றால் கட்டாயம் கடன் வாங்கி இருப்பார்.மற்றவர் அனுபவத்திலிருந்து தாம் பாடம் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வருமா? இவர்களுக்கெல்லாம் யார்? எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?
ஒன்று மட்டும் தெரிகிறது -- விழிப்புணர்வு என்பது படிப்பதினால் வருவதில்லை, புரிந்து கொள்வதினால் வருகிறது.