அடுத்து நாம செல்ல இருப்பது திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டை.
இக்கோவிலுக்கு பெங்களுர்-மைசூர் ஹைவேயில் மாண்டியா என்கிற ஊரிலிருந்து சுமார் 30 கிமி உள்ளே (நாகமங்கலா போகும் வழியில்) செல்ல வேண்டும்.
.இந்தியாவின் சக்கரை மற்றும் வெல்ல உற்பத்தியில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது..அதனால் மாண்டியாவிலிருந்து மேலக்கோட்டைக்கு செல்லும் வ்ழியெல்லாம் கரும்பு தோட்டமும் சிறு சிறு வெல்லப்பாகு காய்ச்சப்படும் ஆலைகளையும் காணலாம் ..உருண்டையான பாகு வெல்லத்தை காட்டிலும்,சதுரமாக காணப்படும் அச்சு வெல்லமே இங்கு பெரும்பாலும் கிடைக்கிறது..
கரும்பு தோட்டம் ,வயல்வெளி மறறும் அங்கு காணப்படும் நீர்நிலைகள் பார்த்துக்கொண்டே சென்றோமானால் மாண்டியவிலிருந்து 1/2 மணி நேரத்தில் மேலக்கோட்டையை அடைந்து விடுகிறோம்..
ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது..அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்.
.
முதலில் திருநாராயண பெருமாளை தரிசித்துவிட்டு வருவோம்......
இக்கோவிலின் மூலவர் திருநாரயணன்.இவருக்கு செலுவநாரயணன் என்கிற திருநாமமும் உண்டு. தாயார் யதுகிரி நாச்சியார்.பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்கு உற்சவ மூர்த்தியான பெருமாளுக்கு செலுவபிள்ளை மற்றும் சம்பத்குமார் என்ற திருநாமங்கள் வழங்கப்படுகிறது..இந்த உற்சவ மூர்த்தியை அவதார காலத்தில் ராமரும், கிருஷ்ணரும் வழிபட்டதாகவும்
அதனால் அவருக்கு ராமபிரியா என்ற பெயரும் வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
சுமார் 1100 வருடங்களுக்கு முன்னால் வைஷ்ணவர்களின் ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர் இப்பகுதியில் பல ஆண்டு காலம் தங்கியிருந்தார்.
அச்சமயம் தொலைந்ததாக சொல்லப்பட்ட இக்கோவிலின் உற்சவமூர்த்தி,டெல்லியை ஆண்டு வந்த முகலாய அரசரின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க,பெருமாளை அந்த அரசரின் மகள் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.ராமனுஜர் அந்தப்பெண்னிடம் பெருமாளை தரும்படி கேட்க அவள் கொடுக்க மறுத்துவிட்டாள்.உடனே ராமனுஜர் பெருமாளை பார்த்து “ செல்லப்பிள்ளை வா” என்று அழைக்க பெருமாளும், “சல்! சல்!” என கொலுசு ஒசை படுத்த நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது. பெருமாளை பிரிந்து இருக்கமுடியாத அந்தப்பெண்னும் அவருடனே மேலக்கோட்டைக்கு வந்து விட்டதகவும் அவர் அதன் பின்னர் துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது....
கோவில் தமிழக கட்டிட கலை மாதிரியாக தெரிந்தாலும்,உள்ளே மணடபங்களில் காணப்படும் சிற்பவேலைபாடுகள்,ஹொய்சாலா மற்றும் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி காலத்தியதாகும்.தாயார் சன்னதியின் முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும் சிற்பவேலைபாடுகள் மனதை கவர்கின்றது.(புகைபடம் எடுக்க அனுமதி இல்லை,அதனால் படம் இணைக்க முடியவில்லை)
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவம் வைரமுடி சேவையாகும்....(இது பற்றி வேறு பதிவில் விவரிக்கிறேன்.)
.பெருமாளை தரிசனம் செய்த பிறகு நேராக கல்யாணி புஷ்கரணிக்கு செல்லுவோம்..
இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக்கொண்டு அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்லலாம்..
கல்யாணியின் கரையிலேயே அதற்கான படிகள் துவங்குகின்றது,இல்லாவிட்டால் பாதி தூரம் வரை வண்டியில் செல்ல பாதை உள்ளது,அதுவரை வண்டியில் சென்று அங்கிருந்து படி ஏறிச்செல்லவும் முடியும்.
நரசிம்மஸ்வாமி யோகத்தில் இருந்து யோக நரசிம்மராக அருள் பாலிக்கும் கோவில் ஒரு கோட்டையாகும்.
இங்குள்ள நரசிம்மரை ப்ரஹல்லாத மஹாரஜா பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணதேவரயர் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ததகவும் கூறப்படுகிறது
மேலக்கோட்டையில் உள்ள சில இடங்கள்....
ராயர் கோபுரம்
அக்காதங்கி குளம்