தமிழ்நாடு அரசு பணியில் வேலை கிடைத்து முதன்முதலில் சேலத்தில் ஒரு அலுவலகத்தில் பணியிடத்திற்கான உத்தரவு கிடைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.ஆனால் அப்பொழுது சென்னையில் இருந்ததால்,என் அம்மா சேலத்தில் என்னை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அவரிடம் அனுமதி பெறுவதற்குள் எனக்கு பெரும் பாடாகிவிட்டது. முதலில் ஒரு நாள் என் அப்பா சேலத்திற்கு சென்று அங்கு நான் பணி புரிய வேண்டிய அலுவலகம்,அதன் சுற்றுசூழல்,மனிதர்கள்,நான் தங்குவதற்கான மகளிர் விடுதி எல்லாவற்றையும் ஆராய்ந்து வந்து சொன்ன பிறகுதான் அம்மா, எனக்கு வேலையில் சேர அனுமதி அளித்தார்கள்.
அதன் பிறகு ஒரு ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு பேருந்தில் சேலத்திற்கு அப்பா அழைத்து சென்றார்கள்.வேலையில் சேரப்போகும் சந்தோஷத்துடன் பயணம் செய்ததாலும்,முதன்முதலில் நீண்ட தூர பஸ் பிரயாணம் என்பதினாலும் எனக்கு பஸ்ஸில் தூக்கம் வரவேயில்லை.
காலையில் சேலம் சென்றவுடன்,நான் தங்க வேண்டிய மகளிர் விடுதிக்கு சென்றோம்.அங்கு தங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு அப்பா என்னை அலுவலகத்திற்கு அழைத்து போக 10 மணிக்கு வருவதாக கூறிவிட்டு தான் தயாராகி வர ஹோட்டலுக்கு போய்விட்டார்.
முதன்முறையாக என் பெற்றோரோ,மிக நெருங்கிய உறவினர்களோ இல்லாத ஒரு இடத்தில் தனித்து விடப்பட்டேன்.முதலில் சற்று பயமாக இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றேன். அந்த அறையில் என்னைத்தவிர இன்னும் 5 பெண்கள் இருந்தார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டில் ஒரு அலமாரி கொடுக்கப்பட்டிருந்தது. என்னுடைய இடத்தில் பொருட்களை வைத்துவிட்டு, மற்றபெண்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ,8 மணிக்கே அலுவகம் செல்ல தயாராகிவிட்டேன்.
சரியாக 8 மணி ஆனவுடன் பள்ளிக்கூட மணி அடிப்பது போல மணி அடித்தது. எதற்கு மணி அடிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த போதே,எனது அறையில் இருந்த ஒரு பெண் டிபன் மணி அடித்து விட்டார்கள் தட்டு எடுத்துக்கொண்டு வா,கீழே டைனிங் ஹாலுக்கு போகலாம் என்றார். எனக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது. என்ன இது மணி அடிச்சா டிபனா என்றேன். அதற்கு மற்றவர்கள் ஆமாம் இது சிறைதான்,போகபோக நீயே தெரிந்து கொள்வாய் மணி அடிச்சுதான் இங்க சோறு என்றார்கள்.
அதற்குள் இன்னும் ஒரு பெண் அதெல்லாம் ஒன்றும் இல்லை 200 பேர்கள் இந்த விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.காலை உணவு, மதிய உணவு எல்லாவற்றையும் தயாராகிவிட்டது வந்து சாப்பிடலாம் என்பதற்காக மணி அடித்து அறிவிப்பு செய்கிறார்கள், அவ்வளவுதான் என்றார்.
முதல் நாள் வேலை என்கிற உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்த நான்,எப்படி கீழே போனேன் என்ன சாப்பிட்டேன் என்கிற நினைவு எல்லாம் இல்லாமல்,சாப்பிட்டுவிட்டு,என் அறைத்தோழிகளிடம் சொல்லிவிட்டு கீழே வந்து,அப்பாவுடன் அலுவலகம் சென்றேன். அங்கு நான் பணியில் சேர்ந்ததும் அன்று மதியமே அப்பா ஊருக்கு கிளம்பிவிடார்.
அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு தோழி தானும் அந்த மகளிர் விடுதியில் தங்குவதாகவும் நாம் இருவரும் இனி சேர்ந்தே அலுவலகம் போய் வரலாம் என்று சொன்னவுடன்,எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.மாலை இருவரும் ஒன்றாகவே கிளம்பி விடுதிக்கு திரும்பினோம்.
விடுதியின் வாசலில் ஒரு பழைய கார் நின்றிருந்ததினைப் பார்த்ததும், என்னுடன் வந்த தோழி அலமேலு அம்மா வந்திருக்கிறார், மீட்டிங் போட்டு நம்மை படுத்த போகிறார். இன்னைக்கு நிம்மதியா பொழுது போனா மாதிரிதான் என்று சலித்துக்கொண்டார். நான் யார் அவர் என வினவ, அவர் இந்த விடுதி ஒரு மாதர் சங்கதினால் (ladies club) நடத்தப்படுகிறது. அலமேலு என்பவர்தான் அதற்கு தலைவி.அவர் சாதாரணமாக வர மாட்டார். வந்தால் ஏதோ பிரச்சனைதான், சரி, வா,காபி குடித்துவிட்டு கீழே போய் என்ன என்று பார்க்கலாம் என்றார்.
அந்த விடுதியில் வேலைக்கு போகும் பெண்கள் சுமார் 100 பேர்களும், தொழில்கல்வி படிக்கும் பெண்கள் மற்றும்,வேறு சில பள்ளிகூடப் பெண்களுமாக சுமார் 100 பெண்கள் தங்கியிருந்தார்கள்.என்னைப்போன்ற வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 4,5 அல்லது 6 பேர்கள் தங்கக்கூடியதான அறைகள்,கட்டில், அலமாரி என்று சற்று வசதிகள் உண்டு.பள்ளிக்கூடப் பெண்களுக்கு மொத்தமாக இரண்டு பெரிய கூடங்கள் (HALL), அவர்களுடைய பொருட்களுக்கு ஆளுக்கு ஒரு லாக்கர். மற்றபடி கட்டுபாடுகளில் பெரிய வித்யாசம் எல்லாம் கிடையாது,சாப்பாடு எல்லாம் ஒருசேரதான். வேலைக்கு செல்பவர்கள் வெளியே சென்று வர உத்தரவு எல்லாம் பெறத்தேவை இல்லை ஆனால் இரவு 8 மணிக்குள் வந்து விட வேண்டும்.
காபி குடித்துவிட்டு கீழே வந்தோம். கூடத்திற்கு போய் உட்காருங்கள் மீட்டிங் இருக்கு என்றார்கள். போய் உட்கார்ந்தோம். வச வச என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.எனக்கோ முதல்நாள் பஸ்ஸில் சரியாக தூங்காததால் என்னையும் மீறி தூக்கம் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு முழித்துக்கொண்டிருந்தேன். விடுதி காப்பாளர் (warden) அறையிலிருந்து அலமேலு அம்மா வெளியே வந்தார்.என்னுடைய தோழி தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை உசுப்பி பாரு அவர்தான் அலமேலு அம்மா என்றார். நிமிர்ந்து பார்த்தேன். சுமார் 60 வயது இருக்கும்,சுமாரான உயரம், பளிச்சென்று நல்ல சிவப்பு கலர் பட்டு மடிசார் புடவை, காது, மூக்குகளில் டால் அடிக்கும் பெரிய புளூஜாக்கர் வைரத்தோடு . கோல்டன் பிரேம் கண்ணாடி, அந்தக் கண்ணடிக்கு பின் கண்டிப்பான பார்வை.
எனக்கு (3 வயதோ என்னமோ) நினைவு தெரியும் முன் இறந்து போன, படத்தில் மட்டுமே நான் பார்த்த அழகான எனது பாட்டியை உயிருடன் நேரில் பார்த்தது போல இருந்தது. அதனாலோ என்னமோ பார்த்த உடன் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. என் தோழியிடம் சொன்னேன்.அவள் சிரித்து கொஞ்சம் இரு அவர் திட்டுவதை கேட்டுவிட்டு அப்புறமா பிடிக்கறதா என்று சொல்லு என்றாள்.அதுவரை வந்த தூக்கமெல்லாம் போய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அவரை கவனிக்க தொடங்கினேன்.
மைக்கெல்லாம் இல்லையே இத்தனை பேருக்கு அவர் பேசுவது கேட்குமா? என்று யோசித்தபோதே அவர் லேசாக தொண்டையை சரி செய்வது போல ஒரு சத்தம் கொடுத்தார். உடனே அங்கு நிலவிய அமைதியை கண்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார்.அவர் பேசியது வரிக்கு வரி தற்போது எனக்கு நினைவில் இல்லை ஆனால் சாரம்சம் என்னவென்றால், ஒரு மகளிர் விடுதியை பெயர் கெடாமல் நடத்துவது எவ்வளவு கடினம் என்றும் அதில் இருக்கும் பெண்கள் எப்படி சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும், பெண்களை நம்பி தனியாக இருக்க விடும் பெற்றொருக்கு நாம் செய்யும் கடமை, இதைப்பற்றியெல்லாம் ரொம்ப நேரம் பேசினார்.
பிறகு உள்ளே தனியாக நின்றிருந்த பள்ளிக்கூட பெண்ணை ஒருத்தியை கூப்பிட்டார். இத்தனை நேரம் நான் சொன்னதையெல்லாம் கேட்டாயே நீ செய்தது சரியா என்று சொல். உங்கம்மாவிற்கு தகவல் அனுப்பட்டுமா? இல்லவிட்டால் நீ ஒழுங்காக இருக்கிறாயா என்றெல்லால் அவளிடம் கேட்டு அவளை மிகவும் கடிந்து கொண்டார்.
அப்பொழுதுதான் என் தோழி சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் அவளை எதற்கு திட்டுகிறார் என்று எங்களுக்கு புரியவில்லை, எதற்கு திட்டுகிறார் என்று நாங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது.
உடனே அலமேலு அம்மா எல்லோரும் சற்று பேசாமல் இருங்க, இந்தப்பெண் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன். உள்ளே தனியாகத்தான் இந்தப்பெண்ணிடன் பேசிப்பார்த்தேன் ஆனால் அவள் தான் செய்த தவறைப் பற்றி கவலை இல்லாமல் எதிர்த்துப்பேசுகிறாள் அதனால் உங்கள் எல்லோர் முன்னிலையும் அவள் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன்,16 வயது கூட ஆகாத இந்த பெண் பள்ளிக்கூடம் கூடபோகாமல் நேற்று ஒரு பொறுக்கி பையனுடன்(இந்த வார்த்தையை குறிப்பிடலாமா என்று தெரியவில்லை ,ஆனால் அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்லுகிறேன். அந்த அமைதியான சூழ்நிலையில் அழுத்தம்திருத்தமாக அவர் உபயோகித்த வார்த்தை என்னால் மறக்க முடியவில்லை.) சினிமா பார்க்க சென்றிருந்தாள் . அவள் செய்தது சரியா? அவளுக்கு அப்பா கூட கிடையாது அவளுடைய அம்மா வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு அவளை படிக்க வைக்கிறாள். என்று சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை பார்த்து உங்கம்மாவை வரச்சொல்லி உன்னை ஊருக்கு அனுப்பி விடுகிறேன் நீ இங்கு இருக்க வேண்டாம் விடுதிக்கு கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்ல, அதுவரை பேசாமல் நின்றிருந்த அந்த சின்ன பெண் அலமேலு அம்மாவை பார்த்து, நிறுத்துங்கம்மா, திட்டிக்கிட்டே போறீங்க, நீங்க கூடத்தான் நேற்றைக்கு சினிமாவுக்கு சார் கூட வந்திருந்தீங்க எனவும், நாங்களெல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டோம்.
பதிவு பெரியதாகிவிட்டது. அடுத்த பதிவில் தொடருகிறேன்..
அன்புடன்
ரமாரவி.
------------------------------------------------------------------------------------------------------------------

அதன் பிறகு ஒரு ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு பேருந்தில் சேலத்திற்கு அப்பா அழைத்து சென்றார்கள்.வேலையில் சேரப்போகும் சந்தோஷத்துடன் பயணம் செய்ததாலும்,முதன்முதலில் நீண்ட தூர பஸ் பிரயாணம் என்பதினாலும் எனக்கு பஸ்ஸில் தூக்கம் வரவேயில்லை.

காலையில் சேலம் சென்றவுடன்,நான் தங்க வேண்டிய மகளிர் விடுதிக்கு சென்றோம்.அங்கு தங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு அப்பா என்னை அலுவலகத்திற்கு அழைத்து போக 10 மணிக்கு வருவதாக கூறிவிட்டு தான் தயாராகி வர ஹோட்டலுக்கு போய்விட்டார்.

முதன்முறையாக என் பெற்றோரோ,மிக நெருங்கிய உறவினர்களோ இல்லாத ஒரு இடத்தில் தனித்து விடப்பட்டேன்.முதலில் சற்று பயமாக இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றேன். அந்த அறையில் என்னைத்தவிர இன்னும் 5 பெண்கள் இருந்தார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டில் ஒரு அலமாரி கொடுக்கப்பட்டிருந்தது. என்னுடைய இடத்தில் பொருட்களை வைத்துவிட்டு, மற்றபெண்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ,8 மணிக்கே அலுவகம் செல்ல தயாராகிவிட்டேன்.
சரியாக 8 மணி ஆனவுடன் பள்ளிக்கூட மணி அடிப்பது போல மணி அடித்தது. எதற்கு மணி அடிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த போதே,எனது அறையில் இருந்த ஒரு பெண் டிபன் மணி அடித்து விட்டார்கள் தட்டு எடுத்துக்கொண்டு வா,கீழே டைனிங் ஹாலுக்கு போகலாம் என்றார். எனக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது. என்ன இது மணி அடிச்சா டிபனா என்றேன். அதற்கு மற்றவர்கள் ஆமாம் இது சிறைதான்,போகபோக நீயே தெரிந்து கொள்வாய் மணி அடிச்சுதான் இங்க சோறு என்றார்கள்.

அதற்குள் இன்னும் ஒரு பெண் அதெல்லாம் ஒன்றும் இல்லை 200 பேர்கள் இந்த விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.காலை உணவு, மதிய உணவு எல்லாவற்றையும் தயாராகிவிட்டது வந்து சாப்பிடலாம் என்பதற்காக மணி அடித்து அறிவிப்பு செய்கிறார்கள், அவ்வளவுதான் என்றார்.
முதல் நாள் வேலை என்கிற உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்த நான்,எப்படி கீழே போனேன் என்ன சாப்பிட்டேன் என்கிற நினைவு எல்லாம் இல்லாமல்,சாப்பிட்டுவிட்டு,என் அறைத்தோழிகளிடம் சொல்லிவிட்டு கீழே வந்து,அப்பாவுடன் அலுவலகம் சென்றேன். அங்கு நான் பணியில் சேர்ந்ததும் அன்று மதியமே அப்பா ஊருக்கு கிளம்பிவிடார்.

அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு தோழி தானும் அந்த மகளிர் விடுதியில் தங்குவதாகவும் நாம் இருவரும் இனி சேர்ந்தே அலுவலகம் போய் வரலாம் என்று சொன்னவுடன்,எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.மாலை இருவரும் ஒன்றாகவே கிளம்பி விடுதிக்கு திரும்பினோம்.
விடுதியின் வாசலில் ஒரு பழைய கார் நின்றிருந்ததினைப் பார்த்ததும், என்னுடன் வந்த தோழி அலமேலு அம்மா வந்திருக்கிறார், மீட்டிங் போட்டு நம்மை படுத்த போகிறார். இன்னைக்கு நிம்மதியா பொழுது போனா மாதிரிதான் என்று சலித்துக்கொண்டார். நான் யார் அவர் என வினவ, அவர் இந்த விடுதி ஒரு மாதர் சங்கதினால் (ladies club) நடத்தப்படுகிறது. அலமேலு என்பவர்தான் அதற்கு தலைவி.அவர் சாதாரணமாக வர மாட்டார். வந்தால் ஏதோ பிரச்சனைதான், சரி, வா,காபி குடித்துவிட்டு கீழே போய் என்ன என்று பார்க்கலாம் என்றார்.
அந்த விடுதியில் வேலைக்கு போகும் பெண்கள் சுமார் 100 பேர்களும், தொழில்கல்வி படிக்கும் பெண்கள் மற்றும்,வேறு சில பள்ளிகூடப் பெண்களுமாக சுமார் 100 பெண்கள் தங்கியிருந்தார்கள்.என்னைப்போன்ற வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 4,5 அல்லது 6 பேர்கள் தங்கக்கூடியதான அறைகள்,கட்டில், அலமாரி என்று சற்று வசதிகள் உண்டு.பள்ளிக்கூடப் பெண்களுக்கு மொத்தமாக இரண்டு பெரிய கூடங்கள் (HALL), அவர்களுடைய பொருட்களுக்கு ஆளுக்கு ஒரு லாக்கர். மற்றபடி கட்டுபாடுகளில் பெரிய வித்யாசம் எல்லாம் கிடையாது,சாப்பாடு எல்லாம் ஒருசேரதான். வேலைக்கு செல்பவர்கள் வெளியே சென்று வர உத்தரவு எல்லாம் பெறத்தேவை இல்லை ஆனால் இரவு 8 மணிக்குள் வந்து விட வேண்டும்.
காபி குடித்துவிட்டு கீழே வந்தோம். கூடத்திற்கு போய் உட்காருங்கள் மீட்டிங் இருக்கு என்றார்கள். போய் உட்கார்ந்தோம். வச வச என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.எனக்கோ முதல்நாள் பஸ்ஸில் சரியாக தூங்காததால் என்னையும் மீறி தூக்கம் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு முழித்துக்கொண்டிருந்தேன். விடுதி காப்பாளர் (warden) அறையிலிருந்து அலமேலு அம்மா வெளியே வந்தார்.என்னுடைய தோழி தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை உசுப்பி பாரு அவர்தான் அலமேலு அம்மா என்றார். நிமிர்ந்து பார்த்தேன். சுமார் 60 வயது இருக்கும்,சுமாரான உயரம், பளிச்சென்று நல்ல சிவப்பு கலர் பட்டு மடிசார் புடவை, காது, மூக்குகளில் டால் அடிக்கும் பெரிய புளூஜாக்கர் வைரத்தோடு . கோல்டன் பிரேம் கண்ணாடி, அந்தக் கண்ணடிக்கு பின் கண்டிப்பான பார்வை.
எனக்கு (3 வயதோ என்னமோ) நினைவு தெரியும் முன் இறந்து போன, படத்தில் மட்டுமே நான் பார்த்த அழகான எனது பாட்டியை உயிருடன் நேரில் பார்த்தது போல இருந்தது. அதனாலோ என்னமோ பார்த்த உடன் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. என் தோழியிடம் சொன்னேன்.அவள் சிரித்து கொஞ்சம் இரு அவர் திட்டுவதை கேட்டுவிட்டு அப்புறமா பிடிக்கறதா என்று சொல்லு என்றாள்.அதுவரை வந்த தூக்கமெல்லாம் போய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அவரை கவனிக்க தொடங்கினேன்.
மைக்கெல்லாம் இல்லையே இத்தனை பேருக்கு அவர் பேசுவது கேட்குமா? என்று யோசித்தபோதே அவர் லேசாக தொண்டையை சரி செய்வது போல ஒரு சத்தம் கொடுத்தார். உடனே அங்கு நிலவிய அமைதியை கண்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார்.அவர் பேசியது வரிக்கு வரி தற்போது எனக்கு நினைவில் இல்லை ஆனால் சாரம்சம் என்னவென்றால், ஒரு மகளிர் விடுதியை பெயர் கெடாமல் நடத்துவது எவ்வளவு கடினம் என்றும் அதில் இருக்கும் பெண்கள் எப்படி சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும், பெண்களை நம்பி தனியாக இருக்க விடும் பெற்றொருக்கு நாம் செய்யும் கடமை, இதைப்பற்றியெல்லாம் ரொம்ப நேரம் பேசினார்.
பிறகு உள்ளே தனியாக நின்றிருந்த பள்ளிக்கூட பெண்ணை ஒருத்தியை கூப்பிட்டார். இத்தனை நேரம் நான் சொன்னதையெல்லாம் கேட்டாயே நீ செய்தது சரியா என்று சொல். உங்கம்மாவிற்கு தகவல் அனுப்பட்டுமா? இல்லவிட்டால் நீ ஒழுங்காக இருக்கிறாயா என்றெல்லால் அவளிடம் கேட்டு அவளை மிகவும் கடிந்து கொண்டார்.

அப்பொழுதுதான் என் தோழி சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் அவளை எதற்கு திட்டுகிறார் என்று எங்களுக்கு புரியவில்லை, எதற்கு திட்டுகிறார் என்று நாங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது.
உடனே அலமேலு அம்மா எல்லோரும் சற்று பேசாமல் இருங்க, இந்தப்பெண் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன். உள்ளே தனியாகத்தான் இந்தப்பெண்ணிடன் பேசிப்பார்த்தேன் ஆனால் அவள் தான் செய்த தவறைப் பற்றி கவலை இல்லாமல் எதிர்த்துப்பேசுகிறாள் அதனால் உங்கள் எல்லோர் முன்னிலையும் அவள் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன்,16 வயது கூட ஆகாத இந்த பெண் பள்ளிக்கூடம் கூடபோகாமல் நேற்று ஒரு பொறுக்கி பையனுடன்(இந்த வார்த்தையை குறிப்பிடலாமா என்று தெரியவில்லை ,ஆனால் அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்லுகிறேன். அந்த அமைதியான சூழ்நிலையில் அழுத்தம்திருத்தமாக அவர் உபயோகித்த வார்த்தை என்னால் மறக்க முடியவில்லை.) சினிமா பார்க்க சென்றிருந்தாள் . அவள் செய்தது சரியா? அவளுக்கு அப்பா கூட கிடையாது அவளுடைய அம்மா வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு அவளை படிக்க வைக்கிறாள். என்று சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை பார்த்து உங்கம்மாவை வரச்சொல்லி உன்னை ஊருக்கு அனுப்பி விடுகிறேன் நீ இங்கு இருக்க வேண்டாம் விடுதிக்கு கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்ல, அதுவரை பேசாமல் நின்றிருந்த அந்த சின்ன பெண் அலமேலு அம்மாவை பார்த்து, நிறுத்துங்கம்மா, திட்டிக்கிட்டே போறீங்க, நீங்க கூடத்தான் நேற்றைக்கு சினிமாவுக்கு சார் கூட வந்திருந்தீங்க எனவும், நாங்களெல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டோம்.
பதிவு பெரியதாகிவிட்டது. அடுத்த பதிவில் தொடருகிறேன்..
அன்புடன்
ரமாரவி.
------------------------------------------------------------------------------------------------------------------