சாய்வு நாற்காலி
வெளிச்சம்
மூக்குக்கண்ணடி
நல்ல புத்தகம்.
.
.
.
.
இது வாழ்க்கை......
“இங்க பாருடி நான் எழுதிய கவிதை ”
“உனக்கு வயதாகிவிட்டது நன்றாக தெரிகிறதும்மா”.
“எப்படி ?”
“நீ தான் எழுதியிருக்கியே சாய்வு நாற்காலி, மூக்குக்கண்ணடி, வெளிச்சம் இதெல்லாம் வயதானதற்கான அடையாளம் “
“அது சரி கவிதை எப்படி இருக்கு?”
“கவிதையா அது? அம்மா நீ கவிதை எல்லாம் முயற்சி பண்ணாத!”
“ஏண்டீ?”
“இங்கபாருமா ஏதோ நீயும் எழுத்தாளின்னு??? நினைச்சு 4 வரி கிறுக்கிண்டு இருக்கே அதோட நிறுத்திக்கோ”
“அடிப்பாவி நான் எழுதறது நல்லாயில்லையா? ”நான் எழுதறதை படிச்சுட்டு கருத்தெல்லாம் சொல்லறாளேடீ?”
“அம்மா! அது,... பாவம் உன் முகத்துக்கு நேர சொல்லக்கூடாதுன்னு சொல்லுவா” “நன்றாக எழுதி பேர் வாங்கறவா இருக்கா. உன்னமாதிரி எதையோ கிறிக்கிட்டு எழுத்தா அதுன்னு சொல்லற மாதிரி பேர் வாங்கறவாளும் இருக்கா”
?????????????????
-----------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால் கவிதையை நன்றாக ரசிக்கத்தெரியும். கல்லூரியில் படிக்கும் காலங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இரண்டு வரி ஹைக்கூ கவிதைகள் அதிகமாக வர ஆரம்பித்த காலம் அது. அப்பொழுது படிக்கும் பொழுது நினைத்துக்கொள்வேன், கவிதை என்ன பெரிய கஷ்டமா? ஒரு வரியை முழுமையாக எழுதாமல் ஒவ்வொரு வார்த்தையாக கிழே கீழே எழுத வேண்டும் அவ்வளவுதான் என்று.
ஒரு வாரப்பத்திரிக்கையில் ஹைக்கூ போட்டி ஒன்று நடந்தது. அதில் எனக்கு பிடித்த நிறைய கவிதைகளை நடுவர் நிராகரித்திருந்தார். அவர் கொடுத்திருந்த அதற்குரிய காரணங்களை படித்தபொழுதுதான் கவிதை எழுதுவது கஷ்டம் என புரிந்து கொண்டேன். எந்தப்புத்தகம், யார் நடுவர் , என்ன காரணங்கள் என்றெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் கவிதை எழுதுவது தனித்திறமை என்று நான் புரிந்து கொண்டது மட்டும் நினைவு இருக்கிறது.
கவிதை---எல்லாம் மனதிலிருந்து உதிக்கவேண்டும். அந்தத் திறமை நம்முடனே பிறந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் வயதின் முதிர்ச்சி எனக்கு அளித்த பாடம்.
அதனால் அதையெல்லாம் முயற்சி செய்யாமல், ஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் அழகான கவிதை எழுதுகிறவர்களை கண்டால் சற்று பொறாமைதான்.
சில உதாரணங்கள்:-
எவ்வளவு அழகாக, சுவையாக இருக்கிறது? பொறாமை படாமல் என்ன செய்வது?
நன்றி
ரமாரவி
------------------------------------------------------------------------------------------------------------------
படங்கள் --நன்றி கூகிள்.