திங்கள், ஜூலை 11, 2011

மைசூர் சுற்றுலா.....4( ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கப்பட்டிணம்.)

ஆதிரங்கம் எனப்படும் ஸ்ரீரங்க பட்டிணம்..

பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் மைசூருக்கு மிக அருகில்  (மைசூருக்கு சுமார் 20 கிமி முன்னதாக) இருக்கிறது இந்த வரலாற்று சிறப்பு பெற்ற ஊர்.

ஸ்ரீரங்க பட்டிணம் என்றாலே ஹைதரலி மற்றும் அவர் மகன் திப்பு சுல்தான் நினைவுக்கு வருவார்கள்.
அந்த மொஹலய அரசர்கள் ஸ்ரீரங்க பட்டிணத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்ததை எல்லோரும் அறிவோம்.அவர்கள் மொகலயர்களாக இருந்த போதிலும் இக்கோவிலுக்கு செய்த திருப்பணிகள் மகத்தானது.

ஊருக்குள் செல்லும் வழியில் காணப்படும் கோட்டை மதில்சுவர் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.




 அதை கடந்து சென்றால் எதிரில் கோவிலின் கம்பீரமான கோபுரம் நம்மை அழைக்கிறது.







திருச்சிக்கருகிலுள்ள ஸ்ரீரங்கத்தை போலவே ஸ்ரீரங்கபட்டிணமும் ஒரு தீவுதான்.
ஊரை சுற்றி காவிரி ஆறு .....

கிழக்கு பகுதியில் காவிரி ஆறும், மேற்கு பகுதியில் அதன் கிளையான பஷ்சிம வாகினியும் ஒடுகிறது.

சயன திருக்கோலத்தில் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி..பெருமளை பார்த்தவுடன் ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை சேவிப்பது போலவே இருக்கும்.

ரங்கநாதரை தரிசித்துவிட்டு அருகிலேயே ஓடும் காவிரி ஆற்றுக்கு சென்று பார்க்கலாம். படித்துறை இருக்கிறது. காவிரி மனதை கொள்ளை கொள்கிறது.

Northern part of Kaveri river

pashchima vahini


pashchima vahini





மைசூர் சமஸ்தானம் 12ம் நூற்றண்டின் முடிவில் யதுராயா என்பவரால் உருவாக்கப்பட்டது.மைசூரும் விஜய நகர சாம்ராஜ்யத்திற்க்கு உட்பட்டு இருந்தது.ஆனால் யதுராயருக்கு பிறகு உடையார்கள் சமஸ்தனத்தை மெதுவாக விரிவு படுத்தினார்கள்.

1610 ம் ஆண்டில் 9 வது அரசர் ராஜா உடையார் என்பவர் ஸ்ரீரங்க பட்டிணத்தை கைப்பற்றினார்.அப்பொழுது அந்த பகுதியில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தவர் திருமலை எனப்பட்ட ஸ்ரீரங்கராயர்.மைசூர் அரசர் அப்பகுதியை கைப்பற்றியதால் ஸ்ரீரங்கராயர் தம் இரு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு தலைக்காடு என்கிற இடத்துக்கு போய்விட்டார்.

அவருடைய இரு மனைவிகளில் அலமேலம்மாள் என்பவர் ஸ்ரீரங்க பட்டிணம் கோவிலின் ஸ்ரீரங்கநாயகி தாயாரின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னிடம் இருந்த விலைமதிக்க முடியாத நகைகளை ரங்கநாயகி தாயருக்கு அணிவித்து மகிழ்வார். தலகாடு  சென்ற ரங்கராயர் உடல்நிலை பாதிப்படைந்து இறந்துவிட்டார்.

அலமேலம்மாளுக்கு நகைகள் தேவைப்படாது என கோவில் அதிகாரிகள் ஸ்ரீரங்கபட்டினத்தை கைபற்றியிருந்த ராஜா உடையரிடம் அந்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டனர். ராஜாவும் சில தூதுவர்களை அலமேலம்மாவிடம் அனுப்ப, அலமேலம்மாள் மிகவும் விலை உயர்ந்த முத்து மற்றும் ரத்தினம் பொருத்தப்பட்ட மூக்குத்தியை மட்டும் கொடுத்தனுப்பி பிற நகைகளை கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆனால் அந்த நகைகளால் விதவையாகிவிட்ட அவருக்கு உபயோகமில்லை என் கருதி ராஜா அதை கைப்பற்று்வதர்க்கு தனது சிறு படையை அனுப்பினார்.
நகைகளுக்காக பெண் என்றும் பாராமல் தன்மீது படை எடுக்கும் மைசூர் அரசரின் மீது கோபம் கொண்ட அலமேலம்மாள், 3 சாபஙகளை கொடுத்துவிட்டு நகைகளுடன் காவிரி ஆற்றில் குதித்து உயிரைவிட்டார்.

அந்த சாபங்கள்:

தலக்காடு புல் பூண்டு முளைக்காத மணல் பகுதியாகட்டும்,
மாலங்கி என்கிற இந்த அழகான மடு உபயோகப்படாத நீர்சுழி ஆகட்டும்,
இனி மைசூர் அரசுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்..

இந்த சாபங்களை கேட்ட மைசூர் ராஜா மிகவும் வருந்தி தங்கத்தினால் அலமேலம்மாவிற்க்கு ஒரு சிலை செய்து தமது அரண்மனையில் வைத்து வழிபட்டார் .இன்றும் மைசூர் அரச குடும்பத்தினர் அச்சிலையை வழிபடுகிறார்கள்..


இவை மூன்று சாபங்களும் இன்றுவரை நிவர்த்தியாகாமலே உள்ளது என்று சொல்லப்படுகிறது.

தலக்காடு இன்றும் மணல் பிரதேசமாக இருக்கிறது. குறிபபிட்ட சில இடங்களில் மரம் செடிகள் எதுவும் வளருவதிலை என சொல்லப்படுகிறது.

மலங்கி என்கிற இடத்தில் காவிரி ஆறு மிகவும் அதிக அழமாக இருக்கிறது.

 அலமேலம்மாவின் சாபத்தின் காரணமாக மைசூர் அரசுக்கு நேரடி ஆண் வாரிசுகள் இருப்பதில்லை. தத்து எடுத்துக்கொண்டவர்களையோ அல்லது அரச குடும்பத்தை சார்ந்தவர்களையோ ராஜாவாக நியமிக்க வேண்ட்டியுள்ளது,


தலக்காடு



 இவைகள் இன்று வரை உண்மையாக உள்ளது.

அலமேலம்மாவின் சாபத்திற்க்குள்ளான இந்த ராஜா உடையார்தான் இப்பொழுதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தசரா விழாவை ஆரம்பித்து வைத்தார்.மேலும் திருநாரயணபுர பெருமாளுக்கு புகழ்பெற்ற வைரமுடி (அல்லது ராஜாமுடி) யையும் அளித்தார்.

அலமேலம்மாள் கொடுத்தனுப்பிய மூக்குத்தி இன்றும் ரங்கநாயகி தாயாரின் திருமுகத்தில் காணலாம்.

இங்குள்ள சரித்திர புகழ் பெற்ற சில இடங்கள்..



மஸ்ஜித்-இ-ஆலா அல்லது ஜமியா மஸ்ஜித்.
தாரியா தொளலத் பாக் எனப்படும் திப்புசுல்தானின் கோடை அரண்மனை



கும்பாஸ் எனப்படும் திப்புசுல்தான் மற்றும் அவரின் பெற்றோர் அகியவரின் சமாதி


திப்புசுல்த்தான் உடல் கிடைத்ததாக சொல்லப்படும் இடம்.
இவ்வாறு சரித்திரம் மற்றும் ஆன்மீக புகழ் பெற்ற இடமான ஸ்ரீரங்க பட்டிணத்தை பார்த்துவிட்டு நேராக CITY OF PALACES என்று அழைக்கப்படும்
மைசூர்... அடுத்த பதிவில்..........







38 கருத்துகள்:

angelin சொன்னது…

அழகிய படங்களுடன் அட்டகாசமான பதிவு ..புதிய விஷயங்கள் அறிந்து கொண்டேன் .பகிர்வுக்கு நன்றி .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பயணக்கட்டுரை. நாங்களும் உங்களுடன் வருவது போன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி.

RAMVI சொன்னது…

வாங்க angelin கருத்துக்கு நன்றி..

RAMVI சொன்னது…

வாங்க வெங்கட், நன்றி கருத்திட்டதற்க்கு..

Gopi Ramamoorthy சொன்னது…

ஆதி ரங்கம், மத்ய ரங்கம் (சிவசமுத்திரம்), திருவரங்கம் மூன்றையும் வரிசையாக சேவிக்க வேண்டும் என்று ஆவல். பார்ப்போம்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காவிரி மனதை கொள்ளை கொள்கிறது.//

தங்கள் பதிவும் மனதை கொள்ளை கொள்கிறது.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

நண்பர்கள் பற்றி தொடர் பதிவு எழுத அழைக்கிறேன். நன்றி.

S Maharajan சொன்னது…

அருமையான பக்தி மார்க்க ஒரு பயணம்
தொடர்ந்து எழுதுங்கள் இது போன்று,
நானும் பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு.

//RAMVI சொன்னது
வாங்க மகராஜன். கருத்துக்கு நன்றி

அதுசரி உங்க வலைபதிவில் கருத்து எங்கிடுவது? அதற்கான கருத்துப்பெட்டியை காண்வில்லையே???? //

மாற்றி விட்டேன் நன்றி...

RAMVI சொன்னது…

ஆம் கோபி, அதுவும் ஒரேநாளில் சேவிச்சா ரொம்ப புண்ணியமாம்.

RAMVI சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வரி.

///நண்பர்கள் பற்றி தொடர் பதிவு எழுத அழைக்கிறேன். நன்றி.////

தொடர்பதிவு எழுத அழைத்ததற்க்கு நன்றி மேடம், முயற்சி செய்கிறேன்...

RAMVI சொன்னது…

கருத்துக்கும், கருத்துப்பெட்டிக்கும் நன்றி மகாராஜன்.....

கோவை நேரம் சொன்னது…

பயணம் ரொம்ப சிறப்பாக இருந்தது.

RAMVI சொன்னது…

நன்றி ஜீவா....

சே.குமார் சொன்னது…

Arumaiyana Katturai akka.

Ama, ungal thalaththai pin thodara mudiyaatha?

மாலதி சொன்னது…

நல்ல பயணக்கட்டுரை. நாங்களும் உங்களுடன் வருவது போன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி.

கோவை2தில்லி சொன்னது…

மைசூர் சுற்றுலா பற்றிய நான்கு பகுதிகளையும் படித்து விட்டேன். விளக்கங்களுடன் நன்றாக இருந்தது.

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

RAMVI சொன்னது…

வாங்க குமார், கருத்துக்கு நன்றி.

ஆம், ஏனோ தெரியவில்லை என் வலை பதிவில் அந்த Option இல்லை..

RAMVI சொன்னது…

நன்றி மாலதி....

RAMVI சொன்னது…

வாங்க ஆதி, தொடர்ந்து வந்து படிப்பதர்க்கு நன்றி...

மாய உலகம் சொன்னது…

ஸ்ரீரங்க பட்டினம் சென்று சாமிய தரிசித்தது போல் உள்ளது...இதன் படத்துடன் கூடிய வரலாறு சேகரித்து இதை அழகாக பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்....
பேராசை பிடித்த மன்னனுக்கு அலமேலுஅம்மாள் கொடுத்த தண்டனையும் சரியானது...சிலை செய்துவழிபட்டால் பாவம் தீர்ந்து விடுமா..ஒரு உயிரையல்லவா பறித்திருக்கிறான்...
பாவம் செய்வானேன்..பரிகாரம் தேடுவானேன் (அதுபோல் சமீபத்தில் உறவுகள் பலாயிரம்பேரை கொன்று குவித்த மன்னனுக்கு பல அலமேலுவின் சாபங்கள் உண்டல்லவா....)

M.R சொன்னது…

வரலாற்று சிறப்பு ,சிறப்பான கட்டுரை .
பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் சொன்னது…

மைசூரை சுற்றி பார்த்தீர்கள்... அப்படியே மாய உலகையும் சுற்றி பாருங்கள்
http://maayaulagam-4u.blogspot.com

மோகன் குமார் சொன்னது…

விரிவான தொடர் பதிவுக்கு நன்றி

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
தங்களது முந்தைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.
ஸ்ரீ ராமானுஜர் பற்றிய விபரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவில் இருக்கிறது. மகிழ்ச்சி.
Followers Widget வேலை செய்யவில்லை. எனது பெயரை இணைக்க முடியவில்லை. சரி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.

RAMVI சொன்னது…

வாங்க மாய உலகம்.என் பதிவிர்க்கு வரவேற்கிறேன், கருத்துக்கு நன்றி.
உங்க மாய உலகத்தையும் சுற்றி பார்க்கிறேன், நன்றி.

RAMVI சொன்னது…

வாங்க எம்.ஆர். என் பதிவிர்க்கு உங்களை வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி..

RAMVI சொன்னது…

வாங்க மோஹன் குமார். கருத்துக்கு நன்றி.

RAMVI சொன்னது…

வாங்க ரத்னவேல் சார், வணக்கம்,என் பதிவுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரொம்ப லேட்டோ!!!!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டூர் போய்ட்டு வந்து பதிவு போட்டீங்களா? பதிவு போடனும்னு நினைச்சுட்டே டூர் போனீங்களா? அண்னன் கிட்டே சொல்லி கண்காணீக்கனும் ஹி ஹி

RAMVI சொன்னது…

வாங்க செந்தில்குமார், ரொம்பவே லேட்..
அண்ணன் இல்லாம நான் எங்கேயும் டூர் போவதில்லை அதனால மாத்தி மாத்தி கண்காணீச்சுக்கலாம்..

Thanai thalaivi சொன்னது…

super post Rama, What is your major in graduation History? Very nice narration.

Thanai thalaivi சொன்னது…

Rama my new post is ready. You are always welcome.

RAMVI சொன்னது…

வாங்க தா.தலைவி. பொருளாதாரத்தில் முதுகலை பட்டம்.(M.A. ECONOMICS). உங்கள் கருத்துக்கு நன்றி.

RAMVI சொன்னது…

தா.தலைவி உங்க பதிவை பார்க்க முடியவில்லை, நீங்க வடிவமைப்புக்கு சென்று பதிவை எல்லோரும் பார்க்கும் வண்ணம் மாற்றல்கள் செய்யவேண்டும் என நினைக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான படங்களும், படவிளக்கங்களும் கண்டு களித்தேன். இதில் பாதி இடங்களுக்கு மேல் நேரில் சென்று வந்த இனிமையான அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RAMVI சொன்னது…

வாங்கோ சார்.கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..

Madhavan Srinivasagopalan சொன்னது…

ம்ம்.. நல்ல பதிவு.
2007 இறுதியில் நான் மைசூர் சென்றுவந்த நினைவுகள் மீண்டும் எழுகிறது.

போட்டோக்களை பெரிது படுத்தி (செல்போன் மூலம் எடுத்ததோ ?) ரிசொளுஷனை குறைத்து விட்டீர்கள்.. அதுதான் குறை.. ம்ம்.. ஒரு வேளை திருஷ்டி படக் கூடாது என தெரிந்தே அப்படி செய்தீர்களோ ?

இது எனது முதல் வரவு, உங்கள் பிளாகிற்கு..

RAMVI சொன்னது…

வாங்க மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்,என் பதிவிர்க்கு உங்களை வரவேற்கிறேன். இன்னும் நான் கணணி பற்றி நிறைய கற்றுக்க்கொள்ள வேண்டும்,அதனால்தான் போட்டோக்கள் சரிவர இல்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.